புத்தளம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் மாநகர சபை மற்றும் புத்தளம் மோட்டார் பந்தய கழகம் Puttalam (Motor Racing Club) இணைந்து ஏற்பாடு செய்த மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை புத்தளம் மாநகர சபையின் மேயர் ரின்ஷாட் அஹமட் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் கலந்து கொண்டார்.
இப் போட்டி நிகழ்வில் புத்தளம் மாவட்ட போட்டியாளர்களுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான போட்டியாளர்கள் கலந்து சிறப்பித்தனர் மோட்டார் விளையாட்டு ஆர்வலர்கள் பார்வையாளர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதும் விஷேட அம்சமாகும்.
இவ்வாறான தேசிய மட்ட நிகழ்வுகள் புத்தளம் நகரின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு புதிய உயிரூட்டலாக அமைவதுடன் புத்தளத்தை தேசிய அளவில் அடையாளப்படுத்துவதற்கும் நீண்டகால நகர அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படுவது மிகவும் அவசியமாகும் என கருத்து தெரிவித்த புத்தளம் மாநகர சபையின் மேயர் ரின்ஷாட் அஹமட் இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற பங்களிப்பு வழங்கிய அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும், பாதுகாப்புத் துறையினருக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் புத்தளம் மாநகர சபையின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் மேலும் தெரிவித்தார்.











No comments