மொனராகலை உனவட்டுன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி மூவர் காயம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
அம்பாறையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று முச்சக்கர வண்டியில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த வேலை மொனராகல வெள்ளவாய பிரதான வீதியில் உனட்டுவ பகுதியில் வைத்து புதன்கிழமை (15) அதிகாலை கே.டி எச் ரக வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இருந்துள்ளனர்
எனினும் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் துரதிர்ஷ்டவசமாகசம்ப இடத்தில் உயிரிழந்துள்ளதுடன். அவரது இரண்டு பிள்ளைகளும் மனைவியும் படுகாயமடைந்த நிலையில் புத்தல பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பாறையைச் சேர்ந்த நிஷாந்த தேவப்பிரிய பண்டாரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



No comments