Breaking News

கற்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 907 கிலோ உலர்ந்த மஞ்சளை கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பங்களாவத்தை மற்றும் சேதாவாடி கடலோரப் பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் (06, 07) இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏறத்தாழ 907 கிலோ உலர்ந்த மஞ்சள், சந்தேகத்திற்கிடமான பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது


அதன்படி, 2026 ஏப்ரல் 06 ஆம் திகதி இரவு, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் வரும் இலங்கை விஜய கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப் பிரிவினரால், கற்பிட்டி பங்களாவத்தை கடலோரப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான பைகள் கண் காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் என்பது (80) கிலோ உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.


மேலும், 2026 ஏப்ரல் 07 ஆம் திகதி மாலை, கற்பிட்டி சேத்தாவாடி கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவுடன் இணைந்து நடத்தப்பட்ட மற்றொரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​பதினாறு (16) சந்தேகத்திற்கிடமான பைகள் கண்டறியப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும், பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் எண்ணூற்று இருபத்தேழு (827) கிலோ உலர்ந்த மஞ்சள் இருப்பை கடற்படையினர் கைப்பற்றினர்.





No comments