அலி காமெய்னியின் மறைவு — ஈரான் தூதரகத்திற்குச் சென்று அனுதாபத்தை பகிர்ந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். டி. எம். தாஹிர்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினரால் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஈரான் நாட்டின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில், கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயத்தில் திறக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில் இன்றைய தினம் (March - 05) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். டி. எம்.தாஹிர் கையொப்பமிட்டார்.
இதன் போது கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆகியோரும் கலந்து கொண்டு கையொப்பமிட்டிருந்தனர்.




No comments