உலக கண் அழுத்த தினத்தை முன்னிட்டு கொழும்பு கடற்படை மருத்துவமனையில் மருத்துவ முகாம்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
எதிர்வரும் மார்ச் 12 ஆம் திகதி உலக கண் அழுத்த நோய் தினத்தைக் கொண்டாடும் வகையில், கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் கண் அழுத்த நோய் மருத்துவமனையில் நடைபெற்றது.
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் ஆதரவுடன், இலங்கை கண் மருத்துவக் கல்லூரியின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களால் கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட இந்த குளுக்கோமா பரிசோதனையில், முந்நூற்று அறுபது (360) முப்படையின் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் குளுக்கோமா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சிறப்பு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர்.









No comments