அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார்.
எம்.யூ.எம்.சனூன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) புத்தளம், கல்பிட்டி- மண்டலக்குடா அல் மனார் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான என்.டீ.எம்.தாஹிர், கட்சியின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஊர் மக்களும் கலந்துகொண்டனர்.






No comments