Breaking News

ஜனாஸா அறிவித்தல் - முல்லைத்தீவு தண்ணீரூற்றை பிறப்படமாகவும், பெருக்குவட்டானை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது முஸ்தபா மன்சூர் அவர்கள் காலமானார்.

முல்லைத்தீவு தண்ணீரூற்றை  பிறப்படமாகவும், தற்பொழுது மதுரங்குளி பெருக்குவட்டானை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியருமான முஹம்மது முஸ்தபா மன்சூர் அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அந்நார் மர்ஹூம்களான முஹம்மது முஸ்தபா, சரிபா உம்மா ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹூமா  ஜனூபா என்பவரின் அன்பு கணவரும், மசூத், பிலால்(CTB), ஆயிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும், அதிபர் மஹ்சூர் (கவிஞர் முல்லை முஸ்ரிபா), மர்ஹூமா றஸீனா ஆசிரியை மற்றும் ரஸீத்தா, ரயீபா, மசூனா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பமீஸ், மஸாஹிமா, பஸ்னா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (14)  பெருக்குவட்டான் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்

மகன் பிலால்





No comments