நீர்கொழும்பு, சிலாபம் களப்புகளில் கடத்தப்பட்ட 742 கிலோ பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (09) மற்றும் திங்கட்கிழமை (10) நீர்கொழும்பு களப்பு பகுதியிலும் சிலாபத்தில் உள்ள கருகபனை களப்பு பகுதியிலும் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று நாற்பத்திரண்டு (742) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் மூன்று (03) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.
நீர்கொழும்பு களப்பில் உள்ள கொத்தலாவல பாலத்திற்கு அருகில் மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெலனி நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, அந்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணித்துக்கொண்டிருந்ததை அவதானித்து சோதனை செய்யப்பட்டது. மேலும், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 16 பார்சல்களில் ளஅடைக்கப்பட்ட சுமார் ஐநூற்று பதின்மூன்று (513) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
அதேவேளை சிலாபத்தின் கருகபனே களப்பு பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் விரைவு நடவடிக்கை படகுகள் தலைமையகம் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு டிங்கி படகுகள் சோதனை செய்யப்பட்டன. இரண்டு (02) டிங்கி படகுகளும், அந்தக் கப்பல்களுக்குள் ஆறு (06) பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் இருநூற்று இருபத்தொன்பது (229) கிலோகிராம் பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டன.
அதன்படி, நீர்கொழும்பு களப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், சிலாபம், கருகபனே களப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாபம் கலால் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments