கற்பிட்டி பத்தளங்குண்டு தீவுக்கு அருகில் தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பத்தளங்குண்டு தீவுக்கு அருகில் தடை செய்யப்பட நத்தை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்கள் மற்றும் 05 டிங்கி படகுகளை கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (18)மாலை இடம்பெற்றுள்ளது/
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கல்பிட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீன்பிடிக்க அவர்கள் பயன்படுத்தி வந்ததாக அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நத்தை வலைகளையும் சோதனை நடத்திய கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், நத்தை வலைகள் மற்றும் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட 05 டிங்கி படகுகள் மேலதிக விசாரணைக்காக புத்தளம் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments