Breaking News

ஜனாஸா அறிவித்தல் - பெருக்குவட்டானைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சபீலா அவர்கள் காலமானார்.

பெருக்குவட்டானை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அனிபா (GS), ஜுபைதா உம்மா ஆகியோரின் அன்பு மகள் ஓய்வு பெற்ற ஆசிரியை சபீலா அவர்கள் நேற்று (26) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் முன்னாள் அதிபர் (ஓய்வு நிலை) றாசிக் அவர்களின் அன்பு மனைவியும், றஸ்லான், ஸஹ்தான், சம்லான் ஆகியோரின் அன்புத் தாயும், பாத்திமா சம்ஹான் அன்பு மாமியாரும்,  நசார், நவாத், நஜான், நாஸிக் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (27) காலை 10.30 மணிக்கு  பெருக்குவட்டான் ஜும்ஆ மஸ்ஜிதில் தொழுகை இடம்பெற்று பெருக்குவட்டான் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ[وَعَذَابِ النَّـار


தகவல் ..
ம். எச். எம். றாசிக்
ய்வு பெற்ற அதிபர்.




No comments