Breaking News

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி - ஒரு நடைமுறை அணுகுமுறை என்னும் தலைப்பில் செயலமர்வு

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி - ஒரு நடைமுறை அணுகுமுறை என்னும் தலைப்பிலான செயலமர்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (ORCHID) கூடத்தில் இடம் பெறவுள்ளது.


இம்மாதம் 2025.09.20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 மணிவரை மேற்படி செயலமர்வு இடம் பெறவுள்ளதாக அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.


வளவாளராக் டாக்டர் ஹஜாரா சதாம் (பிஎச்டி, பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஜிடி, மருத்துவ உளவியலாளர் & விரிவுரையாளர்) கலந்துகொண்டு செயலமர்வை சிறப்பிக்க உள்ளார்.


இந்த செயலமர்வில் பின் வருபவர்கள் கலந்து கொள்வதன் மூலம் அதிகமான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் முகமைத்துவ பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.


* ஆசிரியர்கள்

* பாலர் பள்ளி ஆசிரியர்கள்

* தன்னார்வலர்கள்

* உளவியல் மாணவர்கள்

* பல்கலைக்கழக மாணவர்கள்

* யுனானி மருத்துவர்கள்

* ஆயுர்வேத மருத்துவர்கள்

* ஆலோசகர்கள்

* இல்லத்தரசிகள் இவர்களுடன்

* பல்துறை சார்ந்தவர்களுக்கும் மேற்படி செயலமர்வு அதி கூடிய நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும்.


உங்களது வரவு பதிவுகளை உடனடியாக உறுதி செய்து கொள்வதற்காக +94 76 52 04 604 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டப்படுகின்றீர்கள்.


அதேவேளை இந்த செயலமர்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments