ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஏ. எல். எம் .அதாவுல்லாஹ் பங்கேற்பு
பாறுக் ஷிஹான்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்தும் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 'தோப்பாகிய தனிமரம்' எனும் தொனிப்பொருளில் இன்று (16) செவ்வாய்க்கிழமை மாலை நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் வரவேற்புரை நிகழ்த்தியதோடு முஸ்லிம் முழக்கம் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களின் 'ஓயாத புயலும் சாயாத மரமும்' எனும் நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நூலினை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நூலாய்வு செய்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் நிகழ்வில் நினைவுப் பேருரை நிகழ்த்தினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நிகழ்வுரை அடுத்து நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் கலந்து கொண்டதுடன் நூல் வெளியீடு,விவரணப்படம்,நினைவேந்தல் பாடல், துஆப் பிரார்த்தனை உட்பட மேலும் பல நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.
மேலும் இந் நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ .எல். எம். அதாவுல்லாஹ் கலந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஏ. எல். எம் .அதாவுல்லாஹ் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் கலந்து கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.பல தசாப்தங்களின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments