JobVibe.lk - Sri Lanka Job Portal

பேரெழுச்சிப் பெருவிழா..!

"பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் வாசித், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம் முஷாரப் ஆகியோரை வாழ்த்தி பாராட்டும் பேரெழுச்சிப் பெருவிழா நிகழ்வு" நேற்று (08) பொத்துவில் பிரதேசத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில், கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, நகர சபை, பிரதேச சபை தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.


மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியால் நிரம்பிய இந்நிகழ்வு, பொத்துவில் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பதியப்படும்.


-- ஊடகப் பிரிவு














Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال