Breaking News

புத்தளம் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ். எச். தமீம் அன்ஸார் 35 வருட அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

புத்தளம் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா  வித்தியாலயத்தின் அதிபர் எஸ். எச். தமீம் அன்ஸார்  2025.06.12 ஆம் திகதி  35 வருட அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.


இவர் கனமூலையைச் சேர்ந்த சாகுல் ஹமீட் செய்னம்பு உம்மா ஆகியோரின் அன்பு புதல்வனாகிய தமீம் அன்ஸார் தனது ஆரம்பக் கல்வியை பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், இடை நிலைக் கல்வியை கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை குளி/மதீனா தேசிய பாடசாலை (சியம்பளா கஸ் கொட்டுவ) மற்றும் பு/ சாஹிரா தேசிய பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயின்றுள்ளார்.



1990 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இணைந்து  கொண்டு  பு/சமீரகம ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக கடமையேற்றார்.  பின்னர் தான் ஆரம்பக் கல்வி கற்ற பாடசாலையான பு/கனமூலை முஸலிம் மகா வித்தியாலயாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்று அங்கு சுமார் எட்டு வருடங்கள் கடமை புரிந்து அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார். 


2000 ஆம் ஆண்டு கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து இடமாற்றம் பெற்று பு/ கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்குச் சென்று சுமார்  பதினொரு வருடங்கள் மிகச் சிறப்பாக சேவையாற்றி அப்பாடசாலையின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றியதோடு  அங்கு பிரதி அதிபராகவும் கடமை புரிந்தார்.


அதனைத்  தொடர்ந்து  2011 ஆம் ஆண்டு பு/ அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடயேற்ற அவர் பிரதி அதிபராகவும் பணி புரிந்து அங்கு அதிபராக பணி புரிந்த எம். எச். எம். றாசிக் அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்ற வேளை அங்கு ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க அதிபர் பொறுப்பை ஏற்று மிகச்சிறப்பாக பணி புரிந்து நேற்று (12) ஓய்வு பெற்றார்.


அதிபரின் சேவைக் காலப்பகுதியில் சிறந்த மாணவர்களையும், பல்கலைக்கழகம் செல்வதற்குரிய மாணவரகளையும், ஏனைய தொழில் வாய்ப்புக்களில் செல்வதற்குரிய சிறந்த பிரஜைகளையும், சமூகத்தில் ஒழுக்கமுள்ள ஒரு சமூகத்தையும் உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.


35 வருட அரச சேவையிலிருந்து 2025.08.10 ஆம் திகதி ஓய்வு பெரும் நாளாக இருப்பினும் இரண்டு மாத மருத்துவ விடுமுறையை கணித்து 2025.06.12 ஆம் திகதி ஓய்வு நாளாக கணிக்கப்பட்டு ஓய்வு பெற்றார்.


இவருடைய எஞ்சிய காலம் அல்லாஹ்தஆலா சகல சௌபாக்கியங்களுடன் நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுப்பதோடு அவரது வாழ்நாளை மகிழ்ச்சிகரமாக கழிக்க அல்லாஹ்தஆலா உதவி செய்ய வேண்டும். என பிரார்த்திக்கின்றேன். 


ஏ.எச்.பௌசுல் ஆசிரியர்                              பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)




No comments