(க. மகாதேவன்)
உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் வெள்ளிக்கிழமை (10) காலை இரதோற்சவம்இடம்பெற்றது.
பக்தர்களின் அரோஹரா கோஷம் முழங்க பக்தஅடியார்கள் இரதத்தை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இதில் பலநூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர்.





