(க.மகாதேவன்)
உடப்பு 6ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஓம் சக்தி பாலர் பாடசாலையின் “இரவு நேரப் பாசறை” அதன் ஆசிரியை திருமதி: கிருஷ்ணதேவி கணேசன் தலைமையில் (29) இடம்பெற்றது.
இதன் போது மாணவர்களின் குழு நடனம், மற்றும் ஆசிரியைகளின் பாடல்கள் இடம்பெற்றதோடு,ஐந்தாம் தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்குதல் அத்துடன் ஆசிரியை திருமதி: கிருஷ்ணதேவி கணேசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்குதலும் இடம்பெற்றது.
இதில் இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.சின்னராசா கலந்து கொண்டதோடு, அதிபர்கள்,ஓய்வு பெற்ற அதிபர்கள், பாடசாலை அதிபர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





