Breaking News

மயோன் சமூக சேவை அமைப்பு றிஷாட் பதியூதீனுடன் சந்திப்பு

(அஸ்லம் எஸ். மெளலானா)

அம்பாறை மாவட்டத்தை தளமாகக் கொண்டு இயங்கும் மயோன் சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியதீனை வெள்ளிக்கிழமை (13) மாலை வெள்ளவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


அமைப்பின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான றிஸ்லி முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.


இதன்போது அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் சுகையில் ஜமால்தீன் விபரித்தார். அத்துடன் இளைஞர்களின் நலன் கருதி கட்சியினால் முன்னெடுக்க வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை றிஸ்லி முஸ்தபா சமர்ப்பித்தார்.


இவ்வாறான செயற்பாடுகளுக்கு தன்னால் முடியுமான பங்களிப்புகளை வழங்குவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார்.


இச்சந்திப்பில் மயோன் சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.








No comments

note