JobVibe.lk - Sri Lanka Job Portal

கிராம சேவையாளர் தரம் 03 க்கு கற்பிட்டி பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட மூவர்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும். புத்தளம் எம்.யூ.எம் சனூன் )

கிராம சேவையாளர் தரம் 3 க்கான பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலண்டு பயிற்சிக்கு புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் இருந்து மூன்று விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


அவரகளின் பெயர்கள் :

01.பதூர்தீன் மொஹமட் மொஹமட் தஸ்னீம்

02. அப்துல் அஸீஸ் அஸீமா 

03. அப்துல் சத்தார் பாத்திமா றிஸ்னா பானு 

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (08) காலை 10.30 மணிக்கு அலரி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பிரியந்தவின் பங்குபற்றுதலுடன் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال