(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நிதி திரட்டும் முகமாக சிநேக பூர்வ உதைபந்தாட்ட போட்டி ஒன்று புத்தளம் கடற்படை அணிக்கும் ஏறாவூர் வை.எஸ்.எஸ் அணிக்கும் இடையில் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போது புத்தளத்தில் கடந்த 43 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வரும் எம்.யூ.எம் சனூன் புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தினால் மற்றும் ஒரு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


