புலமைப் பரிசில் பரீட்சையில் களுத்துறை மாவட்டத்தில் மரியம் Zஸிம்ணா Zஸிஹாம் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை!
களுத்துறை பேருவளை நளீம் ஹாஜியார் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி மரியம் Zஸிம்ணா Zஸிஹாம் இவ்வருடம் ( 2021 - 2022) நடை பெற்ற தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தமிழ் மாெழி மூலம் 179 புள்ளிகளைப் பெற்று களுத்துறை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர், பேருவளை சைனாபோர்ட், நௌபர் ஜாபிர் மாவத்தையைச் சேர்ந்த Zஸிஹாம் தம்பதியரின் செல்வப் புதல்வியாவார்.
இவரது இச்சாதனைக்கு கல்லூரியின் அதிபர், அவரது வகுப்பாசிரியை மற்றும் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் ஆகியோர் பக்கபலமாகத் திகழ்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments