Breaking News

பொருளாதார நெருக்கடி : முஸ்லிம் எம்.பி.க்களும் பொறுப்புக் கூறுவார்களா?

எஸ்.என்.எம். சுஹைல்

நாடு பொரு­ளா­தார ரீதி­யிலும் சரி அர­சியல் மற்றும் நிர்­வாக ரீதி­யிலும் மிக மோச­மாக சீர­ழிந்­துள்­ளது. மக்கள் அன்­றாட வாழ்வைக் கடத்­து­வதில் தினம் தினம் மிகுந்த கஷ்­டங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.


டொலர் இல்லா திண்­டாட்­டத்தால் எரி­பொருள் இறக்­கு­மதி தடைப்­பட்­டுள்­ளது. இதனால் நாட்டின் மொத்த பொரு­ளா­தார நிலையும் ஸ்தம்­பிதம் அடைந்­துள்­ளன.


முடி­யாட்சிக் காலத்தில் இலங்கை தன்­னி­றைவுப் பொரு­ளா­தா­ரத்தை கொண்ட நாடாக காணப்­பட்­டது. எனினும், அக்­கா­லப்­ப­கு­தியில் யானைத்­தந்தம், முத்­துக்­கு­ளிப்பு,வாச­னைத்­தி­ர­வி­யங்கள் என்று ஏற்­று­ம­திகள் இருந்­த­தாக மகா­வம்சம் கூறு­கின்­றது.


இலங்கை, குடி­யேற்ற காலத்தில் கறுவா, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற வர்த்­தகப் பயிர்­க­ளுக்கு பெயர் பெற்று விளங்­கி­யது. நாடு சுதந்­தி­ரம்­பெற்ற பின்னர், முத­லா­ளித்­துவ பொரு­ளா­தா­ரத்தை சிறிது காலமே பின்­பற்­றிய போதிலும் அது ஆசி­யா­வி­லேயே மிக முன்­னேற்­ற­க­ர­மான பற்­பல சமூக நல நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டது. ஆனால் 1956 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த அர­சாங்கம் முழுக்க முழுக்க சம­வு­டமை பொரு­ளா­தா­ரத்தை கைக்­கொள்­ளத்­தொ­டங்­கி­யது. பின்னர் 1970 ஆம் ஆண்டு மூடிய பொரு­ளா­தார முறை­மையை பின்­பற்­றி­ய­மையால் நாடு பட்­டினி நிலை­மைக்குத் தள்­ளப்­பட்­டாலும் மெல்ல மெல்ல தன்­னி­றை­வ­டையும் நிலைக்கு செல்ல முயற்­சித்­தது. என்­றாலும், அன்­றைய அர­சாங்­கத்தின் மூடிய பொரு­ளா­தார கொள்­கையை மக்கள் ஏற்றுக் கொள்­ள­வில்லை. இதன் விளை­வாக 1977 ஆம் ஆண்டு திறந்த பொரு­ளா­தார கொள்­கையை முன்­னி­றுத்­திய ஜே.ஆர். அர­சாங்கம் பெரு வெற்­றி­யுடன் ஆட்­சி­ய­மைத்­தது. பின்னர் வந்த அர­சாங்­கங்கள் அதே கொள்­கை­யையே பின்­பற்­றின.


இப்­போது சிங்­கள தேசி­ய­வாதம், பொரு­ளா­தார மேம்­பாடு, தேசிய பாது­காப்பு என்று தேர்தல் பிர­சாரத்தின் பிர­தான பேசு­பொ­ரு­ளாக கொண்டு 2019 இல் ஆட்­சிக்கு வந்த கோத்­த­பாய ராஜ­பக்­சவின் அர­சாங்கம் எந்த பொரு­ளா­தார கொள்­கையை பின்­பற்­று­கின்­றது என அறிந்­து­கொள்ள முடி­ய­வில்லை. இன்று அவ­ரிடம் தெளி­வான பொரு­ளா­தாரக் கொள்கை இல்லை என்­பது நன்கு வெளிப்­பட ஆரம்­பித்­துள்­ளது.


19 ஆவது திருத்தம் மூலம் நிர்­வாகத் துறைக்கு அதி­காரம் இல்­லா­தி­ருந்­த­போது மீண்டும் நிறை­வேற்று அதி­கா­ரத்தை வழங்­கி­யது அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆம் திருத்­த­மாகும். இதன்­மூலம் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களின் அதி­காரம் குறை­வ­டைந்­த­துடன் பாரா­ளு­மன்ற ஆட்சி முறை­மையும் பாதிக்­கப்­பட்­டன. சட்­டத்தின் ஆட்சி கேள்­விக்­கு­றி­யா­கி­யது.


இதன் விளை­வா­கவே இன்று நாட்டில் ஒரு குடும்­பத்­தி­னரே அனைத்­தையும் தீர்­மா­னிக்கும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. அத்­தோடு, அவர்­களின் தேர்தல் வியா­பா­ரத்­துக்கு துணை­போகும் பெரு வணி­கர்­களே சில விட­யங்­களை நிர்­வ­கிக்கும் நிலைமை தோன்­றி­யி­ருக்­கி­றது.


“நாட்டில் 17 அத்­தி­ய­வ­சிய பொருட்­களின் விலை­களைக் கட்­டுப்­ப­டுத்தும் அதி­கா­ரத்தை அர­சாங்கம் பெற்­றி­ருந்­தது. எனினும், கடந்த நவம்­பரில் ஜனா­தி­ப­தியால் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மா­னிக்­க­மைய அந்த அதி­கா­ரத்தை இன்று வர்த்­த­கர்­களே பெற்­றுள்­ளனர். அரி­சியின் விலையை கட்­டுப்­ப­டுத்­து­பவர் ஒரு வியா­பா­ரி­யாவார். எரி­பொருள் விலை­களை ஐ.ஓ.சி. கட்­டுப்­ப­டுத்­து­கின்­றது. இப்­படி வியா­பா­ரி­களே இன்று சந்தை விலை கட்­டுப்­பாட்டை கையில் வைத்­துக்­கொண்டு நினைத்­த­துபோல் விலை ஏற்றம் செய்­கின்­றனர்” என கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.


“ஜனா­தி­பதி தனக்­கான அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்­கின்றார். நினைத்­த­படி வர்த்­த­மா­னி­களை வெளி­யி­டு­வதும், யாரோ ஒரு தரப்பின் பேச்சைக் கேட்டு அதனை வாபஸ் பெறு­வ­து­மாக நாட்டின் நிர்­வா­கத்தை சீர்­கு­லைத்துக் கொண்­டி­ருக்­கிறார். நிர்­வாகத் திறன் இன்­மையே இன்­றைய பிரச்­சி­னை­க­ளுக்கு காரணம்” என்று குற்றம் சாட்­டினார் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப்.


முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 20 ஆம் திருத்­தத்­திற்கு ஆத­ர­வ­ளித்து ஜனா­தி­ப­திக்கு கூடுதல் அதி­கா­ரத்தை கொடுத்­தமை, அதன் மூலம் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தை பலப்­ப­டுத்தி நிதி அமைச்சர் பசில் ராஜ­ப­க்ஷவை நிதி­ய­மைச்­சுக்கு கொண்­டு­வந்­தமை மற்றும் அர­சாங்­கத்­திற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை கொடுத்து தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­பட வழி­வ­குத்­தமை இன்­னொரு சாபம் என்றும் இம்ரான் எம்.பி. கடு­மை­யாக சாடினார்.


நாட்டில் பெற்றோல் தட்­டுப்­பாடு அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது. இதனால் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு மின் துண்­டிப்பு ஏற்­ப­டு­கி­றது. அத்­தி­ய­வ­சியப் பொருட்­களின் விலைகள் சடு­தி­யாக அதி­க­ரித்துச் செல்­கின்­றன. எரி­வாயு தட்­டுப்­பாடு கார­ண­மாக பலரின் வீடு­களில் சமையல் நடை­பெ­று­வ­தில்லை. கடை­களில் வாங்கிச் சாப்­பி­டலாம் என்று வெளியில் சென்றால் கடை­களும் பூட்டிக் கிடக்­கின்­றன. இதனால், மக்கள் பசி படி­னி­யுடன் நாட்­களை கடத்தும் நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றனர்.


கடந்த நவம்பர் மாதத்தில் பாரா­ளு­மன்றில் முன்னாள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, இந்த மார்ச் மாதத்தில் ஏற்­பட இருக்கும் எரி­பொருள் தட்­டுப்­பாடு மற்றும் மின் விநி­யோக நெருக்­க­டிகள் சம்­பந்­த­மாக கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். இதற்கு பதி­ல­ளிக்க நிதி­ய­மைச்சர் பாரா­ளு­மன்­றத்தில் இருக்­க­வில்லை. ஆளும் தரப்­பினர் பொடு­போக்­காவே பதி­ல­ளித்து ரணிலை சாடி­ய­துடன் அர­சாங்கம் திட­மாக இருப்­ப­தாக கூறினர்.


ரணில் அன்று பாரா­ளு­மன்றில் சுட்­டிக்­காட்­டி­ய­துபோல் இன்று நாட்டின் நிலைமை மோச­ம­டைந்­தி­ருக்­கி­றது. எதிர்­வரும் நாட்­களில் இன்னும் சிக்­கல்­களை சந்­திக்க நேரிடும் என்றும் அவர் கூறு­கின்றார். இதற்கு செவி­சாய்ப்­ப­தாக அர­சாங்கம் இல்லை. தான்­தோன்றித் தன­மா­கவும் கர்­வத்­து­டனும் செயற்­ப­டு­வ­தா­கவே தெரி­கி­றது.


அர­சாங்­கத்தை சர்­வ­தேச நாணய நிதி­யத்தை நாடு­மாறு எதி­ர­ணி­யினர் வலி­யு­றுத்­து­வ­தா­கவும் அர­சாங்கம் அர­சியல் ரீதியில் சிந்­திப்­பதால் அதனை தவிர்த்து வரு­வ­தா­கவும் அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கும் திகா­ம­டுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் கூறினார்


“அர­சாங்­கத்தின் திட்­டங்­க­ளுக்கு எதிர்க்­கட்­சிகள் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தில்லை. பசில் ராஜ­பக்ச நல்ல திட்­டங்­க­ளு­ட­னேயே தனது அமைச்சுக் கட­மை­களை முன்­னெ­டுக்­கிறார். எடுத்த வேகத்தில் எத­னையும் செய்­து­விட முடி­யாது. ஆனால், அவ­ரிடம் திட­மான நம்­பிக்கை இருக்­கி­றது. எனவே, தொடர்ந்தும் நான் அவ­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்­குவேன்” என்றும் முஸர்ரப் எம்.பி. குறிப்­பிட்டார்.


“நாடு எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு எல்­லோரும் பொறுப்பு” என்று கூறிய முஸர்ரப் எம்.பி.யிடம், நிதி அமைச்­சரை கொண்டு வந்­த­மைக்கு நீங்­களும் பொறுப்­பு­தானே என்று கேள்வி எழுப்­பி­ய­தற்கு “இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு பாரா­ளு­மன்­றமே முழப் பொறுப்பு என்ற நிலை தோன்­று­மாயின் நானும் அதனை பொறுப்­பேற்கத் தயா­ரா­கவே இருக்­கிறேன்” என்றார். அர­சாங்­கத்­திற்­கான ஆத­ரவு தொடரும் என திட­மாக கூறும் முஸர்ரப் எம்.பி. தொடர்ச்­சி­யாக அரசின் திட்­டங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்­ப­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார்.

 


அத்­தோடு, முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எச்.எம்.எம். ஹரீஸ் கடந்த வாரம் கிழக்கில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றின்­போது கருத்து வெளி­யிட்டார். “எமது நாடு இப்­போது எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்ற பொரு­ளா­தார நெருக்­கடி தீர்க்க்­கப்­பட வேண்­டு­மானால் இந்த நாடு அனைத்து சமூ­கத்­தி­னரும் நிம்­ம­தி­யாக வாழக்­கூ­டிய ஒரு நாடா­கவும் இன­வா­த­மற்ற அர­சாங்­க­மா­கவும் மாற்­றப்­பட வேண்டும் என்­கிற யதார்த்தம் உண­ரப்­பட்­டி­ருக்­கி­றது.”


“அரசு மீது சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்ற இன­வாத சாயத்தை இல்­லாமல் செய்­வ­தற்­காக சகல சமூ­கங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற கட்­சி­களை உள்­ள­டக்­கிய தேசிய அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்க வேண்டும் என்று அமைச்சர் பஸில் ராஜ­பக்ச முன்­வைத்­தி­ருக்கும் கோட்­பா­டா­னது சிறு­பான்­மை­யி­ன­ருக்கு நம்­பிக்­கை­யான எதிர்­கா­லத்தை தோற்­று­விக்கும்” என்றும்  ஹரீஸ் எம்.பி. குறிப்­பிட்­டுள்ளார்.


ஆக, முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடர்ந்தும் அர­சாங்­கத்­திற்கு முண்டு கொடுக்க தயா­ரா­கவே இருக்­கின்­றனர். இந்­நி­லையில், நாடு எதிர்­கொள்ளும் அத்­தனை பிரச்­சி­னை­க­ளுக்கும் இந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பொறுப்புக் கூற­வேண்­டி­ய­வர்­களே!


அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு பங்­காளிக் கட்­சிகள் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றன. இன­வாத சிந்­த­னை­யு­டைய விமலின் தரப்பும் உதய கம்பன்பிலவின் தரப்பும் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெளியேறப்போவதாக அரசாங்கத்தை எச்சரித்துக்கொண்டிருக்கிறது. கட்சியாகவோ, தனி நபர்களாகவோ அரசாங்கத்துடன் இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு செயற்பட பொது ஜன பெரமுனவினர் பின்வாங்கும் நிலையில் இவர்களே வலிந்துபோய் அரசாங்கத்தை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வெட்கப்படவேண்டிய நிலை என்றே கூறவேண்டும்.


முஸ்லிம் தனித்துவ அரசியலை முதன்மைப்படுத்தி சுய நிர்ணய அரசியலை முன்னெடுத்த அஷ்ரபின் கொள்கை கோட்பாடு என்று கூறும் இவர்கள் இணக்க அரசியலையும் தாண்டி அடிபணியும் அரசியலையும் கூஜா தூக்கும் அரசியலையுமே முன்னெடுக்கின்றமை கவலைக்குரியதாகும். இந்த இக்கட்டான தருணத்திலாவது நாட்டின் தேசிய நலனை முன்னிறுத்திய தீர்மானங்களை எடுப்பதற்கு இந்த எம்.பி.க்கள் முன்வர வேண்டும். இன்றேல் நாட்டின் அழிவுக்கு துணைபோன பாவம் இவர்களை சும்மா விடாது.




No comments