புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை படைத்த பெருக்குவற்றான் மாணவர்கள்
2021-2022 கல்வி ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின்படி புத்தளம் பெருக்குவற்றான் அல்-மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களாகிய M.W. M. அஸ்ஜத் 162, S.F.சல்மா 161, M.H.M. ஹம்தி 158, MR.F. றுஸ்தா 148, M.F.மஹ்தியா 146 ஆகியோர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலை வரலாற்றில் 5 பேர் ஒரே தடவையில் சித்தியடைந்துள்ளார்கள்.
மேற்படி பாடசாலையில் தரம் 5ல் 22 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர் இவர்களில் 20 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும் 2 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்று பாடசாலையின் 70 வருட வரலாற்றில் 100% சித்தியைப் பெற்றுள்ளனர்.
இவ்வெற்றிக்கு வழிகாட்டியவர் வகுப்பாசிரியை F.P.M. டொரின் மங்கலிக்கா .
No comments