புத்தளம் சாஹிரா கல்லூரியில் இயங்கிவந்த கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் இன்று நிறைவடைந்தது
புத்தளம் சாஹிரா கல்லூரியில் இயங்கிவந்த கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் இன்றுடன் (24) முடிவுக்கு வந்தது.
புத்தளத்தில் 'கொவிட் - 19' தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களில் 21 பேர் உறுதி செய்யப்பட்டு கொழும்பின் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
ஏனையோர் இங்கு அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் 3 வாரங்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் பின்னர் இன்று (24) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
No comments