புத்தளம் கங்கேவாடியில் இடம்பெற்ற மனிதாபிமான, அனர்த்த நிவாரண பயிற்சி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமர்வானது நவம்பர் (12 - 14 ) ஆகிய மூன்று நாட்கள் புத்தளம், கங்கே வாடியவில் உள்ள கடற்படை விரைவு அதிரடி படகு படை தலைமையகத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
“All hands on deck” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மூன்று (03) நாள் பயிற்சி அமர்வானது கோட்பாட்டு மற்றும் நடைமுறை பயிற்சிகளைக் கொண்டதாகும்.
அதன்படி பேரிடர் தயார்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் பதிலளிப்பது குறித்த விடயங்கள் விளக்கக்காட்சிகள் மூலம் நிபுணர்களால் முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






No comments