Breaking News

இந்தியாவிடமிருந்து எமது நாட்டை பாதுகாப்பதற்கு இதுதான் சிறந்த வழி

“அகண்ட இஸ்ரேல்” என்ற யூதர்களின் லட்சியம் போன்று அகண்ட பாரதமே எங்கள் லட்சியமும், இலக்கும் என்றும் அதனை அடைந்தே தீருவோம் என்றும் ஒரு இந்தியர் சபதமிட்டுள்ளார். 


இதனை நாங்கள் சாதரணமாக கடந்து செல்ல முடியாது. அவரது இலட்சியத்தை தடுத்து எமது நாட்டை பாதுகாப்பதென்றால் என்ன செய்ய வேண்டும் ?  


இந்தியா அணுவாயுத நாடு என்பதனால் அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக  நாங்கள் உடனடியாக அணு குண்டு பரிசோதனை மேற்கொள்ளுதல் வேண்டும். 😂


அத்துடன் டில்லி நகரை சென்று தாக்கக்கூடிய நீண்டதூர ஏவுகணை, அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடிய ஏவுகணை ஆகியவற்றை உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளுதல் வேண்டும். 🫣


மேலும் எமது விமானம் தாங்கி கப்பல்களை இந்து சமுத்திரத்தில் நிறுத்துவதுடன், நீர்மூழ்கி கப்பல்களை ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி இந்தியாவை கண்காணித்தல் மற்றும் உளவு விமானங்களை அனுப்பி இந்திய இராணுவ நிலைகள் மற்றும் நகர்வுகளை கண்காணிக்க வேண்டும். 🧐


அத்துடன் எமது நாட்டை சுற்றி வான்பாதுகாப்பு சாதனங்களை அக்டிவ் செய்து எமது வான் எல்லைகளை இருபத்திநான்கு மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தல் வேண்டும். 😊


மேலும் இந்தியா ரஷ்யாவை சார்ந்திருப்பதன் காரணமாக நாங்கள் அமெரிக்காவின் F35 விமானங்களை அதிகமாக கொள்வனவு செய்து தயார்நிலையில் வைத்திருப்பதுடன் போர் ஒத்திகைகளிலும் ஈடுபடுதல் வேண்டும். 🫣


மேலே கூறப்பட்டவைகளை செயற்படுத்துவதன் மூலம் சீனாவின் அச்சுறுத்தலிலிருந்து தைவான் தன்னை பாதுகாத்துக்கொள்வது போன்று இலங்கையை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் முயற்சியை தடுக்க முடியும்.  


குறிப்பு: எழும்பி நிக்க இடுப்பில பெலப்பு இல்ல அதுக்குள்ள ஒன்பது பொண்டாட்டியா என்று மாத்திரம் கேட்டுடாதிங்கோ மக்காள்........  🤣🤣🤣


முகம்மத் இக்பால்




No comments