Breaking News

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல் - காலஞ்சென்ற அஹ்மத் ஹினாயத் அவர்களின் ஜனாஸா இன்று இஷாத் தொழுகையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.

புத்தளத்தை பிறப்பிடமாகவும், மதுரங்குளி - நல்லாந்தழுவையை வசிப்பிடமாகவும் கொண்ட அஹமத் ஹினாயத் அவர்கள் குவைத் நாட்டில் (06) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலஞ்சென்ற அப்துல் காதர் சனூர்தீன் மற்றும் சித்தி சாபிரா ஆகியோரின் அன்பு மகனும், மதுரங்குளி நல்லாந்தழுவை சாபிரா உம்மா அவர்களின் அன்புக் கணவரும், இரபான், அர்ஷான், ஹஸீப் ஆகியோரின் அன்புச் சகோதரரும், முஹம்மது ஹகம், முஹம்மது ஹகீக், ஹனியா மர்யம் ஆகியோரின் அன்புத் தந்தையும், புத்தளம் மன்னார் வீதியிலுள்ள புத்தளம் Bபுக்சொப் உரிமையாளரும், இன்சைட் கல்வி நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினரும், ஆசிரியருமான  அஸீர் மற்றும் முஹம்மது ஷாபி, முஹம்மது சப்றாஸ், ஸாலிஹா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (08) இஷாத் தொழுகையுடன் குவைத் நாட்டில் சுப்ஹான் (SUBHAN) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


Location👇

https://maps.app.goo.gl/56gKcdFL1CU1E46ZA?g_st=iwb




No comments