குருணாகலில் இடம்பெற்ற தமிழ் இலக்கிய செயலமர்வு!.
(உடப்பு-க.மகாதேவன்)
வடமேல் மாகாண கலாசார மற்றும் கலை விவகார அமைச்சின் வழிகாட்டலில் மாகாண கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்த தமிழ் இலக்கிய செயலமர்வு (15) அன்று குருணாகல் மாகாண சபை காரியாலய கட்டடத் தொகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பேராதணை பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.எஸ்.சுதர்ஷன் அவர்களும், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.டி.அஜந்தகுமார் அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டு செயலமர்வை நடத்தினார்கள்.
இதில் இலக்கியவாதிகளும், பாடசாலை மாணவர்களும் பங்கு பற்றி பயனடைந்தனர்.
No comments