ஜனாஸா அறிவித்தல் - சமீரகம மு. வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் மிஹ்ழார் (நளீமி) அவர்களின் அனபுத் தாய் ஹாஜியானி சுபைதா அவர்கள் காலமானார்.
புத்தளம் - புளிச்சாக்குளத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அல்ஹாஜ் ஸரீப், ஆமினா உம்மா ஆகியோரின் அன்பு மகள் ஹாஜியானி சுபைதா உம்மா அவர்கள் இன்று (25)ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலஞ்சென்ற அல்ஹாஜ் முத்து மரைக்கார் அவர்களின் அன்பு மனைவியும், அல்ஹாஜ் பைசல், மிஹ்ருன்நிஸா, அல்ஹாஜ் அஷ்ஷெய்க் மிஹ்லார் (நளீமி) - (அதிபர் - பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயம், தலைவர் - அ. இ. ஜ. உ. புத்தளம் அக்கறைப்பற்று கிளை) ஆகியோரின் அன்புத் தாயும், முஹம்மத் நஸார், வஜீஹா பர்ஹான் , றிஸானா பேகம், ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8.30 மணிக்கு மாதவன்ஓடை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
தகவல் மகன்
அஷ்ஷெய்க் M.M.M.மிஹ்ழார் (நளீமி)
No comments