JobVibe.lk - Sri Lanka Job Portal

வாயடைத்துப்போன ரவூப் ஹக்கீம். எப்படி ?

மாவடிப்பள்ளி வெள்ளத்தில் உயிரிழந்த மத்ரசா மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டரை இலட்சங்களுக்கு பதிலாக பத்து இலட்சங்களை வழங்குமாறு பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரிக்கைவிடுத்தபோது, ஏற்கனவே பத்து இலட்சங்கள் கொடுப்பதற்கு அனுரகுமார திசாநாயக்கா தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்ததாக NPP அரச தரப்பிலிருந்து பாராளுமன்றத்தில் மு.கா தலைவருக்கு பதில் வழங்கப்பட்டது.  


இந்த சம்பவத்தினால் ரவூப் ஹக்கீம் வாயடைத்துப் போனதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. 


ஆனால் தற்போது குறித்த குடும்பங்களுக்கு இரண்டரை இலட்சம் ரூபாய்கள் மாத்திரமே வழங்கப்பட்டதாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. 


இதன் உண்மைத்தன்மை என்ன என்று தெரிந்தவர்கள் கூறுங்கள்.


முகம்மத் இக்பால்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال