Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புளிச்சாக்குளத்தை பிறப்பிடமாகவும், மதுரங்குளி - கனமூலையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாபிழ் ஏ.ஏ.ஐயூப்கான் (பலாஹி) காலமானார்.

புளிச்சாக்குளத்தை பிறப்பிடமாகவும், மதுரங்குளி  - கனமூலையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாபிழ் ஏ.ஏ. ஐயூப்கான் (பலாஹி) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹும் அப்துல் அஸீஸ் அவர்களின் அன்பு மகனும், பதீலா அவர்களின் அன்புக் கணவரும், அல் - ஹாபிழ் அஹ்ஸன் (ஸலாஹி)  அவர்களின் அன்பு தந்தையும், அல் - ஹாபிழ் - மௌலவி முஜிபுர்ரஹ்மான் (மனாரி)  (கனமூலை உம்மு பல்ழ் பெண்கள் அரபுக் கல்லூரி அதிபர்) அவர்களின் அன்பு சகோதரரும், அல்ஹாபிழ் - மௌலவி ஸல்மானுல் பாரிஸ் (தீனி) (கடையாமோட்டை அர் - ரஷீதியா அரபுக் கல்லூரி விரிவுரையாளர்) அவர்களின் அன்பு மைத்துனருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்ம் இன்ஷா அல்லாஹ் இன்று (14) அஸர் தொழுகையுடன்  கனமூலை - நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.



நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار





No comments

note