ஊரடங்கின் போது கைப்பற்றப்பட்ட வாகனங்களை மீள வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
ஊரடங்கு சட்டக்காலப்பகுதியில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை, உரிமையாளர்களுக்கு மீள வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments