இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர்.
அந்தவகையில் புதத்ளம் மாவட்டம் சிலாபம் சவரானை பகுதியில் கஷ்டப்படுகின்ற மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை புத்தளம் தொகுதி பொது ஜன பெரமுன அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எச்.எம்.ரியாஸ் வழங்கிவைத்தார்.
இவ்வாறான பல உதவிகளை மக்களுக்கு செய்வதற்கான ஆயத்தங்களையும் செய்துகொண்டிருக்கின்றார். அவரின் முயற்சிகள் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
நன்றி - சமூகத்தின் குரல் -
Tags
உள்நாட்டு செய்திகள்




