இரு புனிதத்தலங்களின் காவலரின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான தூதுவராக எனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் இவ்வேளையில், எனது பதவிக்காலம் முழுவதும் இலங்கை அரசாங்கமும் மக்களும் வழங்கிய சிறந்த விருந்தோம்பலுக்கும் ஒத்துழைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்குமிடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதற்குப் பங்களித்தமை எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகும்.
நமது இரு நாடுகளுக்குமிடையிலான நீடித்த உறவுகள் குறித்த மிகுந்த பெருமையுடனும், நமது நட்பு நாடுகளினதும் மக்களினதும் நலன்களுக்குப் பயனளிக்கும் வகையில் நமது இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வளர்ந்து செழித்தோங்கும் என்ற முழுமையான நம்பிக்கையுடனும் நான் இலங்கையிலிருந்து விடைபெறுகிறேன் என இலங்கைக்கான சவூதி அரேபியத்தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தனது பிரியாவிடை செய்தியில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
