ஜனாஸா அறிவித்தல் - விருதோடை எள்ளுச்சேனையைச் சேர்ந்த பாத்துமுத்து அவர்கள் காலமானார்.
விருதோடை எள்ளுச்சேனையைச் சேர்ந்த காலம் சென்ற பிச்சை தம்பி பக்கீர் முஹம்மது அவர்களின் அன்பு மனைவி பாத்துமுத்து அவர்கள் இன்று (04) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் செய்த்தூன் உம்மா, ஜூனைதா உம்மா, கபீர் (பாவா), காலம் சென்ற ரஹிமா உம்மா, மரியம்பு பீவி, ஐநா உம்மா, ஆயோரின் அன்புச் சகோதரியும் நபீலா, பதுறியா, சமீன், நியாஸ் (பியோன்), ரிஷானா, சாணாஸ் ஆயோரின் அன்புத் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (05) காலை 9.00 மணிக்கு விருதோடை ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِوَعَذَابِ النَّـار
தகவல் மகன்
நியாஸ்

No comments