கற்பிட்டியின் இப்பன்தீவு மற்றும் ஆலங்குடா பகுதிகளில் ஜூன் மாதத்தில் கடற்படையினரால் கைப்பற்ற 47 பொதிககளில் கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லி மற்றும் விதைகள்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையினர் கடந்த ஜூன் மாதம் நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகள் அடங்கிய 47 பொதிகள் மற்றும் ஒரு லொறி, இரண்டு டிங்கி படகுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி கற்பிட்டி ஆலங்குடா கடற்கரை பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனம் நடத்திய சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்று கவனிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது குறித்த நேரத்தில் சட்ட விரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகளையும் 32 பொதிகளாக பொதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் மற்றும் லொறி என்பன கடந்த ஜூன் 02 ம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
அத்தோடு கற்பிட்டி இப்பன்தீவைச் சுற்றி உள்ள கடல் பகுதியில் விஜய கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் கவனிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன குறித்த நேரத்தில் சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 15 பொதிகை அடைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி தூள்களையும் இரண்டு டிங்கி படகையும் கடந்த ஜூன் மாதம் 28 ம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடற்படை நடவடிக்கைகளுக்கு மத்தியில் கடத்தல்காரர்கள் பூச்சிக்கொல்லி பொருட்கள், லொறி மற்றும் டிங்கி படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
No comments